![]() |
தபகேஷவ் மகாதேவ் |
ரிஷிகேஷிலிருந்து மசூரி சென்றோம். இது ஒரு மலை
பிரதேசம். சரியான குளிர். இங்கிருந்து தான் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி செல்ல
வேண்டும் (கங்கை மற்றும் யமுனை உற்பத்தியாகும் இடங்கள்) நாங்கள் அங்கு செலவில்லை.
ஆனால் மசூரியில் ஒரு நாள் தங்கிருந்தோம். அங்கு மிகவும் உயரமான சிகரமான gun hill பாயிண்ட் என்ற இடத்துக்கு ரோப் காரில் சென்றோம். அங்கு சிகர
உச்சியிலிருந்து இமைய மலையை 360 டிகிரி கோணத்தில் காணலாம். மிகவும் ரம்மியமாக
இருந்தது. அங்கு சுமார் 6 டெலெஸ்கோப் சிறிதும் பெரிதுமாக வைத்திருக்கிறார்கள்.
அதன் மூலம் பார்த்தால் பனியால் மூடிய இமையமலை சிகரங்கள் காணலாம். டெலெஸ்கோப் மூலம்
யமுனோத்ரி பார்க்கலாம். பனி குறைவாக உள்ள நாட்களில் கங்கோத்ரியும் தெரியும் என
சொல்கிறார்கள்.
பின்பு அங்கிருந்து டெராடூன் வந்தோம். அங்கு
தபகேஷவ் மகாதேவ் கோவிலுக்கு சென்றோம். இது ஒரு மிக பிரசித்தமான சிவன் கோவில்.
இங்கு மூலஸ்தானம் இயற்கையாக அமைந்த ஒரு குகைக்குள் உள்ளது. அந்த பாறையிலிருந்து
நீர் சிவ பெருமான் மேல் தொடர்ந்து அபிஷேகம் செய்வது போல விழுந்துகொண்டே
இருக்கிறது. இந்த குகைக்கு பெயர் த்ரோணர் குகை. த்ரோணர் இந்த குகையில்
தங்கியிருந்ததாக நம்பபடுகிறது.
ஒரு வனதிற்கு நடுவில் ஒரு நதிக்கரையில் இந்த அழகான
கோவில் அமைந்துள்ளது. ஆற்றை தாண்டி அடுத்த கரையில் ஒரு ஆஞ்சநேயர் குகை கோவில்
உள்ளத .மறுகரைக்கு செல்ல ஒரு சிறு பாலம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக