செவ்வாய், 16 ஜனவரி, 2018

பீமாஷங்கர் ஆலயம் (12 ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று)



2017 நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நாங்கள் சென்று வந்த பீமஷங்கர் (மகாராஷ்ட்ரா), த்வாராகேஷ்வர்,நாகேஷ்வர், சோமநாதர் ஆலயம் (குஜ்ராத்),உஜ்ஜைன் மகாகாலேஷ்வர், மகா காலிகா மா, கால பைரவர் மற்றும் ஓம்காரேஷ்வர், மகாகாலேஷ்வர்(மத்திய பிரதேசம்) கோவில்களை பற்றி இனி வரும் பதிவுகளில் எழுத உள்ளேன்.

பீமாஷங்கர் ஆலயம் அடர்ந்த வனபகுதியில் புனேயிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது. நாங்கள் புனேயிலிருந்து வாடகை காரில் இந்த கோவிலுக்கு சென்று வந்தோம். இது 12 ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று. மேற்கு மலை தொடர்ச்சியில் உள்ள சாயாத்ரி மலைகள் என்று இதற்கு பெயர். இங்கிருந்து தான் பீமா நதி உற்பத்தியாகிறது.

ஸ்தலபுராணம்: இங்கு பீமா என்று ஒரு அசுரன் வாழந்ததாகவும் (கும்பகர்ணனின் மகன்) வாழ்ந்ததாகவும், அவன் விஷ்ணுவை பழிவாங்குவதற்காக தவமிருந்து பிரம்மனிடம் வரம் பெற்று மூவுலகத்தில் உள்ள அனைத்து தேவர்களையும் தனது செயல்களால் மனவருத்தம் அடைய செய்கிறான். இவனது தீய செய்லகளிலிருந்து தங்களை காப்பாற்றிகொள்ள பிரமன் தலமையில் அனைத்து தேவர்களும் சிவ பெருமானை வேண்டுகிறார்கள். கமரூபேஷ்வர் என்ற சிவனடியாரை பீமா துன்புறுத்தி சிவனை வணங்காமல் தன்னை வணங்க வாற்புறுத்துகிறார். சிவனைடியார் அவ்வாறு செய்ய மறுக்கிறார். கோபமடைந்த பீமா உடனே அவர் பூஜை செய்யும் சிவலிங்கத்தை அழிக்க வாளை எடுக்கிறான். கோபமுற்ற சிவபெருமான் அங்கு பிரத்யக்ஷ்மாயி பீமா என்ற அசுரனை பஸ்மாமாக்கிறார். நாரதர் மற்றும் மற்ற தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவ பெருமான் அங்கயே தங்கி அருள் புரிவதாக ஸ்தலபுராணம். பீமன் என்ற அரக்கனை அழித்ததினால் இங்கு சிவவபெருமானுக்கு பெயர் பீமாஷங்கர். பீமனுடன் நடத்திய போரின் போது சிவபெருமானின் உடலிலிருந்து வந்த வியர்வை தான் பீமா நதியாக உருவாகியது என இங்கு நமபப்படுகிறது.

இன்னொரு ஸ்தலபுராணம் சிவபெருமான் இங்கு ஆதியும் அந்தமுமில்லா ஜ்யோதியாக காட்சியளித்தார் என்பது தான். இது 13 ஆம் நூற்றாண்டு கோவில் என சொல்லப்ப்டுகிறது. வீர சிவாஜி 18 ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

மலை ஏறி சென்றாலும் கோவில் தாழவான பகுதியில் உள்ளது. படிகளில் கீழ் நோக்கி இறங்க வேண்டும். சமதளத்தில் கோவில் உள்ளது. வட நாட்டு கோவில்கள் போல இங்கும் சிவலிங்கத்துக்கு நாம் அபிஷேகம் செய்யலாம்.

கோவில் உள்ளே செல்லும் இடத்தில் முதலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது .நேரே எதிர்புறமாக மூலஸ்தானம் உள்ளது.
மூலஸ்தானம் சுயம்புலிங்கம்.நந்தி முன்புறம் அர்த்தமண்டபத்தில் உள்ளது. சன்னதிக்கு வெளியில் காலபைரவருக்கு சன்னதி உள்ளது.


கோவிலுக்கு 1 கி.மீ முன்னதாக ஒரே ஒரு ஹோட்டல் உள்ளது .அதை தவிர்த்து கோவிலுக்கு அருகில் ஏதுமில்லை. சிறு கடைகள் கோவில் அருகில் உள்ளது. 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

http://pokkishavishvanathar.blogspot.in/
https://www.facebook.com/pokkisavisvanathar/

please visit and write about this temple for it's development