சனி, 2 மார்ச், 2013

திருபரங்குன்றம் முருகன் கோவில்

அறுபடை வீடுகளில்  முதல் வீடு தான் திருபரங்குன்றம் . மதுரையில்  இருந்து  சுமார் 5 கி.மீ  தொலைவில் உள்ளது . 1050 அடி உயரம் உள்ள ஒரு மலை  அடிவாரத்தில் இந்த கோவில் உள்ளது.இது ஒரு குடைவரை கோவில் . மலையை  குடைந்து  தான்  மூல விக்கிரஹம் உருவாக்க பட்டுள்ளது  .நக்கீரர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருபரங்குன்றத்தில் தான் 'திருமுருகாற்றுப்படை ' இயற்றினார்' .திருசெந்தூரில்சூரனை வதம் செய்த பின்பு திருபரங்குன்றத்தில் முருகன் இந்திரனின்  மகள் தெய்வயானையை மணந்ததாக தான் தல புராணம் சொல்கிறது . சன்னதியில்  பிள்ளையார் ,சிவன்,துர்க்கை  விஷ்ணு என தனி தனி  சன்னதிகள் உள்ளது.  மலையை சுற்றி நிறையை சிறு குடைவரை கோவில்களில் உள்ளது . மலையின் பின்புறம் இன்னொரு குடைவரை கோவில் உள்ளது.இந்த கோவில் தென்பரங்குன்றம் என்று அறியபடுகிறது . இந்த சிவன்  கோவிலுக்கு  காசி     விஸ்வநாதர்  கோவில்  என்று பெயர். திருவண்ணாமலை போல இங்கும் பக்தர்கள்  பௌர்ணமி  அன்று கிரிவலம் செல்கிறார்கள் .இந்த கோவில் தற்பொழுது  இந்திய தொல்பொருள் கழகத்தின் கட்டுபாட்டில் உள்ளது .இந்து மதம் ,புத்த மதம் ,சமணர்கள் குறித்த பல அரிய கல்வெட்டுகள்  இந்த மலையில் உள்ளது.சமணர்களின் படுக்கை என்று அறியப்படும் அரிய கல்வெட்டுகளும் இங்கு உள்ளது .மேலும் இது  மதுரையின் தொன்மையை குறிப்பதும் ஆகும் .மலையின் மேல் புறம்  சமண துறவியின் நின்ற கோல சிலையும்  உள்ளது.காசி விஸ்வநாதகோவில்   அருகில் ஒரு   சுனை உள்ளது .காசி சுனை என்று இது அழைக்கபடுகிறது .இந்த மலையின் மேல் உள்ள குகையில் 18 சித்தர்கள்  சமாதி அடைந்ததாக சொல்லபடுகிறது .இந்த குகைக்கு யாரும் இது வரை   போக முடியவில்லை என்றும் சொல்கிறார்கள் .18 சித்தர்களும் இன்றும் அங்கு இருப்பதாக நம்பபடுகிறது .திருஞான சம்பந்தர் ,சுந்தர மூர்த்தி நாயனார் ,நக்கீரர் ,அருணகிரிநாதர்  ஆகியோர்  இந்த  தலம் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளனர் .இந்த மலையின்  இன்னொரு சிறப்பு மலை மேல் ஒரு முஸ்லிம் தர்கா உள்ளது .இந்த பகுதி சிக்கந்தர் மலை என்று அறியபடுகிறது .ஜெட்டாவை சேர்ந்த ஹசரத் சிக்கந்தர் சுல்தான்  பாதுஷாவும் , மதினாவில் இருந்து வந்த ஹசரத் சுல்தான் சையத் இப்ராஹிமும்  9 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்ததாக சொல்கிறார்கள் .அவர்களின் தர்கா தான் இது .கேரளாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் எல்லா மதத்தினரும் இங்கு வருகிறார்கள் .திருவண்ணாமலை போல இங்கும் மலை மேல்  திருகார்த்திகை அன்று தீபம் தீபம் ஏற்றுகிறார்கள் .

கருத்துகள் இல்லை: