ஹரித்வாரிலுள்ள மற்றொரு புராதன கோவில் பிகேஷ்வர்
மந்திர். சிறிய கோவில் தான். மரங்கள் சூழ அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த இடத்தின் ஸ்தல
புராணம் ஹிந்தியில் ஒரு கல்லில் இங்கு எழுதி வைக்கபட்டுள்ளது. இங்கு ஒரு விலவ் மரம்
உள்ளது.வில்வ மரத்தை ஹிந்தியில் பில்வ என சொல்லுகிறார்கள். இங்கு பார்வதி தேவி அமர்ந்து
சிவ பெருமானை வேண்டி தவம் இருந்ததாக ஒரு இடம் உள்ளது. அந்த தவத்தின் பொருட்டு சிவ பெருமான் இந்த வில்வ மரத்தின் கீழ் தோன்றி அம்பாளுக்கு காட்சியளித்ததாக ஸ்கந்தபுராணத்தில்
கூறபட்டூள்ளது என இங்கு எழுதி வைத்துள்ளார்கள். பக்தர்கள் ஈசனுக்கு வில்வ இலைகளை போட்டு
கங்கா நீரில் இங்கு அபிஷேகம் செய்யலாம். நந்தியும் உள்ளது .
அது தவிர பிள்ளையார், ஆஞ்சநேயர்
மற்றும் பார்வதி தேவிக்கு தனி சன்னதிகளும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக