திங்கள், 4 மார்ச், 2013

பழமுதிர்சோலை முருகன் கோவில்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது அறுபடை வீடான பழமுதிர்சோலை மதுரை அருகில் உள்ள அழகர் மலையில் உள்ளது . முதல் அறுபடை வீடான திருப்பரங்குன்றமும் ஆறாவது வீடான பழமுதிர்சோலையும் மதுரை அருகில் உள்ளது சிறப்புக்குரியது.இங்கு முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார் .கோவில் தாண்டி மலை முகப்புக்கு சென்றால் அங்கு என்றும் வற்றாத ஒரு நீரூற்று உள்ளது. நூபுர கங்கை என்று பெயர்.அருணகிரிநாதர் இந்த தலத்தை பற்றி திருப்புகழில் 16 பாடல்கள் இயற்றியுள்ளார்.நக்கீரரும் திருமுருகாற்றுபடையில் இந்த தலம் குறித்து பாடியுள்ளார். முருக பெருமான் ஔவையாரை சோதித்த நெல்லி மரம் இன்றும் இங்கு உள்ளது .பக்தர்கள் இந்த மரத்தையும் வழிபட்டு செல்கிறார்கள் . மலை அடிவாரத்தில் இருந்து வாகனம் மூலம் கோவிலுக்கு செல்ல மலை பாதை உள்ளது . நடந்து செல்ல காட்டு வழி பாதையும் உள்ளது .

கருத்துகள் இல்லை: