திங்கள், 9 பிப்ரவரி, 2009

மருதமலை முருகன் கோவில்


கோவை அருகே உள்ளது மருதமலை.இது முருக பெருமானின் மற்றொரு பிரபல மலை கோவில்.கோவையில் இருந்து தடாகம் சாலை வழியாக மருதமலை சென்றடையலாம்.மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மருதமலைக்கு போவதற்கு பேரூந்துகள் உள்ளன.மருத மலையில் மிகுந்த அளவில் மருத மரங்கள் உள்ளது.மிகவும் களைப்படைந்த ஒரு முனிவர் மருத மரத்தின் நிழலில் அமர்ந்து தண்ணீர் வேண்டி முருக பெருமானை வேண்டியபொழுது ஒரு மருத மரத்தின் வேரில் இருந்து தண்ணீர் பிரவாகம் எடுத்து சுரந்ததாக ஸ்தல வரலாறு.தண்ணீரை பார்த்த முனிவர் மருத ஜலம் வந்ததால் மருதாச்சலபதி என்று முருக பெருமானை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.மலை கோவிலின் இன்னொரு சிறப்பு மலை மேல் இருக்கும் பாம்பாட்டி சித்தர் குகை. பாம்பாட்டி சித்தர் குகையில் அமர்ந்து முருகனை நினைந்து தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.இங்கு ஒரு பாம்பாட்டி சுனையும் உள்ளது.சித்தர் குகையில் உள்ள நாகராஜர் சுயம்பு என்றும் சொல்லப்படுகிறது.மலை கோவிலுக்கு செல்ல படிகள் உள்ளன. தேவஸ்தான பேரூந்துகளும் உள்ளன.மூல சன்னதிக்கு வெளி புறமாக பக்தர்கள் அமர்வதற்கு ஏதுவாக ஒரு பெரிய கூடம் உள்ளது. மருத மலையில் இருந்து வரும் மூலிகை காற்றினை இங்கு அமர்ந்து அனுபவிக்கலாம். மலை மேல் முருக பெருமானின் திரு உருவ தரிசனம் முடித்து விட்டு வெளியில் வந்து பார்த்தால் கோவை நகரின் அழகை காணலாம். மருத மலையில் தான் கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் உள்ளது.

கருத்துகள் இல்லை: