புதன், 28 ஜனவரி, 2009

அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயம்


அவினாசி கோவையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் திருப்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ளது. இது ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம்.இறைவன் திருநாமம் அவிநாசியப்பர்,அம்மன் திருநாமம் கருணாம்பிகை. சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.சுந்தரமூர்த்தி நாயனார் இங்குள்ள தாமரைக்குளத்தில் 'முதலை வாயில்' சிக்கிய சிறுவனை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.பிரம்மன் இங்கு நூறு ஆண்டுகளாக சிவனை வழிபட்டதாகவும் ,இந்திரனின் யானை ஐராவதம் இந்த சிவஸ்தலத்தில் 12 ஆண்டுகள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.முருகன்,காரைக்கால் அம்மன் மற்றும் காலபைரவருக்கும் தனி சன்னதிகள் உள்ளது.காலபைரவருக்கு வட மாலை சாற்றி வழிபாடு செய்வது இங்கு மிகவும் விசேஷம்.

கருத்துகள் இல்லை: