வெள்ளி, 14 நவம்பர், 2008

திருகோஷ்டியூர்


திருகோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஓன்று.திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் சிவகங்கையில் இருந்து 25 கி.மீ வடக்கும் ,காரைக்குடியில் இருந்து 25 கி.மீ மேற்கு திசையிலும் உள்ளது திருகோஷ்டியூர் என்ற திருத்தலம். திருகோஷ்டியூர் நம்பி பிறந்த ஊர். ராமானுஜருக்கு நம்பி திருமந்திரம் உபதேசித்த ஊர்.திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் இந்த திருகோயில் உள்ளது.மாசி மாதம் மகம் நட்சித்திர கூடி வரும் தினத்தில் தெப்ப உற்சவம் நடைப்பெறும்.தெப்பத்தில் மிதக்கும் பெருமாளை சேவித்து சங்கல்பம் செய்து விளக்கு எடுத்தால் நினைத்த காரியம் உடனே கை கூடும். காரிய சித்தி ஆன பிறகு மீண்டும் அடுத்த மாசி மகம் தெப்ப திருவிழா நேரத்தில் வந்து விளக்கு தெப்பத்தில் மிதக்க விட வேண்டும்.முதல் முறை விளக்கு எடுப்பவர் காரியசித்தி ஆனவர்கள் விடும் விளக்கை எடுத்து சங்கல்பம் செய்ய வேண்டும்.தெப்ப திருவிழா சமயத்தில் நாடெங்கும் இருந்து வரும் மக்கள் வெள்ளம் கட்டுகடங்காமல் இருக்கும்.இந்த திருகோவில் 3 நிலைகளில் உள்ளது. கீழ் தளத்தில் சிவலிங்கம் உள்ளது.அதன் மேல் 3 நிலைகள் உள்ளது.முதல் நிலையில் பெருமாள் சவுமிய நாராயண பெருமாள் சயன கோலத்தில் உள்ளார்.இரண்டாம் நிலையில் பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார்.மூன்றாவது நிலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.மூன்றாவது தளத்தில் ஒரு சிறு இடைவெளி உள்ளது.அங்கிருந்து தான் ராமானுஜர் திருமந்திரத்தை உலகிற்கு தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ராமானுஜருக்கு திருமந்திரம் உபதேசிக்க நம்பி 17 முறை மறுக்கிறார்.18 வது முறை ஒத்துக்கொண்டு உபதேசிக்கிறார்.ஆனால் ராமனுஜரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு,அதாவது அவர் திருமந்திரத்தை வேறு எவருக்கும் சொல்லக்கூடாது என்று வாக்குறிதி.தவறினால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்று நம்பி கூறுகிறார்.ஆனால் ராமானுஜர் சத்தியத்தை மீறுகிறார்.தனக்கு நரகம் கிடைத்தாலும் பலருக்கு மோட்சம் கிடைக்கும் என்று நம்பிக்கு பதில் உரைக்கிறார்.நம்பி உடனே ராமானுஜரை எம்பெருமானார் என்று அழைக்கிறார்.இங்கு எம்பெருமனாருக்கும் சன்னதி உண்டு.


கருத்துகள் இல்லை: