திங்கள், 21 ஜனவரி, 2013

காடி சுப்ரமணிய சுவாமி கோவில் ,தொட்டபல்லாபூர்

காடி சுப்ரமணிய சுவாமி கோவில் கர்நாடக மாநிலத்தில் மிகவும் புகழ் பெற்ற முருகன் கோவில். கர்நாடகாவில் இரண்டு புகழ் பெற்ற முருகன் கோவில்கள் உள்ளது.ஓன்று காடி சுப்பிரமணிய கோவில் .இது தொட்டபல்லாபூர் அருகில் உள்ளது. இது பெங்களூருவில் இருந்து சுமார் 60 கி.மீ.தொலைவில் உள்ளது .இன்னொன்று குக்கே சுப்ரமணிய கோவில்.இது மங்களூரு அருகில் சுப்ரமணியா என்ற கிராமத்தில் உள்ளது. ஆம்,அந்த ஊரின் பெயரே சுப்ரமண்யா தான்.இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது;காடி சுப்ரமணிய கோவில் பற்றியது. முருகன் கோவில் என்ற உடன் நம்மூரில் இருப்பது போல் முருகன் கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்திருப்பது போல் சுவாமி சிலை இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.கர்நாடகாவில் பொதுவாக முருகனை சர்ப்பமாக தான் வழிபடுகிறார்கள்.கடுமையான சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் மற்றும் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முக்கியமாக இந்த இரண்டு முருகன் கோவிலில் ஏதாவது ஒன்றில் சர்ப்ப;வழிபாடு செய்து தோஷம் நீங்க வேண்டி கொள்கிறார்கள்.பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் சர்ப்ப் சிலைகளை கோவிலில் இதற்கென்றே உள்ளஅரச மரத்தடியில் வைக்கிறார்கள். காடி சுப்பிரமணிய ஆலயத்தில் உள்ள அரசமரத்தடியில் ஆயிர கணக்கில் சர்ப்ப சிலைகளை காணலாம். காடி சுப்பிரமணிய கோவிலில் உள்ள மூல சன்னதியில் உள்ள சிலை சுயம்பு ஆக வந்தது என்று சொல்ல படுகிறது. படமெடுத்த ஐந்து தலை சர்ப்பத்தினுள் சிறிய முருகன் சிலை உள்ளது.இதை கூர்ந்து நோக்கினால் மட்டுமே பார்க்க முடியும். முருகன் கிழக்கு நோக்கி உள்ளது. இதன் நேர் பின்புறம் அதே சிலையில் மேற்கு நோக்கி நரசிம்ஹர் சிலை உள்ளது. ஒரே கல்லில் இரண்டு சிலைகளும் உள்ளது. இரண்டு சிலைகளுமே சுயம்புவாக் வந்தது என்று நம்பபடுகிறது..பக்தர்கள் நரசிம்ஹரையும்,முருகனையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய ஏதுவாக் மூல ஸ்தானத்தில் ஒரு கண்ணாடி வைக்க பட்டுள்ளது. முருகனை நேராகவும் நரசிம்ஹரை கண்ணாடி வழியாகவும் தரிசிக்கலாம்.பொதுவாகவே கையில் வேலுடன் உள்ள முருகன் கோவில்களிலும் கர்நாடகாவில் முருகன் காலடியில் சர்ப்பம் வைத்திருப்பார்கள்..மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோவில் காடி சுப்பிரமணிய கோவில்.

கருத்துகள் இல்லை: