கற்பகவிநாயகர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பகவிநாயகர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

கற்பகவிநாயகர் கோவில் ,பிள்ளையார்பட்டி














சிவகங்கை மாவட்டம் திருபத்தூர் குன்றக்குடி சாலையில் இருக்கிறது பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில்.சாலையிலேயே கோவிலின் தோரண வாயில் இருக்கிறது . அங்கிருந்து சுமார் அரை கி.மீ தூரத்தில் உள்ளது கோவில் .கோவிலுக்கு முன் தெப்பகுளம் உள்ளது .இது ஒரு குடைவரை கோவில் . மலையை குடைந்து சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கற்பகவிநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை இந்த கோவில் . கற்பகவிநாயகர் வலம்சுழி விநாயகர் . தும்பிக்கை வலது புறமாக சுழித்துக்கொண்டிருக்கும்  விநாயகரின்  வலது கையில் சிவலிங்கம் இருப்பதை காணலாம் . இங்கு சுவாமியின் திருநாமம் மருதீசர் .திருவீசர் என்றும் அழைக்கபடுகிறார். அம்மன் திருநாமம் வாடாமலர்மங்கை . அம்மனுக்கு சிவகாமி என்று மற்றொரு திருநாமமும் உண்டு .

அம்மனுக்கு சிவகாமி என்று மற்றொரு திருநாமமும் உண்டு . தக்ஷிணாமூர்த்தி ,முருகபெருமான் ,லக்ஷ்மி ,சரஸ்வதி ,துர்க்கை ,நவகிரகங்கள் ,ஆஞ்சநேயர் சன்னதிகளும் சுற்று பிரகாரத்தில் உள்ளன . விநாயகர் சதுர்த்தி மிக விமரசியாக 9 நாள் விழாவாக இங்கு கொண்டாட படுகிறது . மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் முக்குருணி விநாயகருக்கு சதுர்த்தியன்று முக்குருணி (18 படி ) மாவில் மோதகம் செய்து படைப்பது போல பிள்ளையார்பட்டியிலும் படைக்கபடுகிறது விநாயக சதுர்த்தியன்று கற்பகவினாயகரை தரிசிப்பது மிகவும் விசேஷம் .அன்று பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் இருக்கும்.