ஞாயிறு, 16 நவம்பர், 2008

இன்மையில் நன்மை தருவார் கோவில்

மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் மட்டுமே. ஆனால் மதுரையில் மற்றுமொரு பழமை வாய்ந்த மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. அதுவும் நகரின் மத்தியில்.அது தான் இன்மையில் நன்மை தருவார் கோவில்.இது மிகவும் முக்கியமான் கோவில்களில் ஓன்று. நேதாஜி சாலையில் இருந்து இந்த கோவிலுக்கு செல்லலாம்.மேல மாசி வீதியில் இருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.இங்கு சிவ பெருமான் அவராலயே உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட்டுள்ளார். சோமசுந்தரர் தான் இங்குள்ள சுவாமியும். போன ஜென்ம பாவங்களுக்கு இந்த ஜென்மத்திலயே மன்னிப்பு அருளுகிறார் இந்த ஆலயத்தில்.வெளி பிரகாரத்தில் விபூதி விநாயகர்,பைரவர்,கால பைரவர்,முருகன்,கணேசர் உள்ளனர்.பொதுவாக சிவன் கோவில்களில் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கி இருக்கும்.ஆனால் இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி மேற்கு நோக்கி அமைக்க பட்டுள்ளது.மற்றுமொரு சிறப்பு சுவாமி சன்னதியில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சுவாமி அம்மனுடன் இருக்கும் காட்சி.அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.சுவாமி சன்னதியின் உள்புறம் நடராஜர்,மகாலக்ஷ்மி,விசாலாக்ஷி,பிரம்மா,சரஸ்வதி,துர்க்கா,சிவகாமி,தக்ஷிணாமூர்த்தி, மற்றும் கோதண்டராமர் சன்னதிகள் உள்ளது.பிரதோஷ காலத்தில் நடைபெறும் 108 சங்காபிஷேகம் மிகவும் பிரசித்தம்.பிரதோஷ காலத்தில் மீனாக்ஷி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கும் சங்காபிஷேக தரிசனம் செய்கிறார்கள். ஆவணி மாதத்தில் மீனாக்ஷி கோவில் உற்சவ மூர்த்திகளான சுவாமியும் அம்மனும் இந்த ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு செங்கோல் பெற்று ஆட்சி புரிகின்றனர்.

கருத்துகள் இல்லை: