ஞாயிறு, 16 நவம்பர், 2008

வெட்டுடையார் காளி கோவில்

மதுரையில் இருந்து தொண்டி செல்லும் பாதையில் கொல்லங்குடி என்ற சிற்றூர் உள்ளது.சிவகங்கையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர்.இங்குள்ள அருள்மிகு வெட்டுடையார் காளி கோவில் மிகவும் பிரசித்தம்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.பொதுவாக கிராமத்து மக்கள் வம்பு வழுக்ககளில் இருந்து விடுபட இந்த அம்மனிடம் வேண்டுகிறார்கள்.இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பு தொலைந்துபோன அல்லது காணாமல் போன பொருட்கள் மீண்டும் திரும்ப கிடைப்பதற்கு இந்த சக்தி வாய்ந்த அம்மனிடம் வேண்டி காரியசித்தி பெற்றவர்கள் ஏராளம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் செல்லும் ஒரு கோவிலாக தற்பொழுது வெட்டுடையார் கோவில் உள்ளது.மெயின் சாலையில் இருந்து கோவிலுக்கு சென்றுவர ஆட்டோ வசதி தற்பொழுது உள்ளது.மெயின் சாலையில் இருந்து சுமார் 3 கி.மீ உள் செல்ல வேண்டும். மெயின் சாலையில் கோவிலின் முகப்பு வளைவு உள்ளது.

வெட்டுடயாள் என்பாள் விளங்கும் திருக்கரங்கள்
எட்டுடயாள் சின்ன இடுப்பினிலே பட்டுடயாள்
தெம்புடயாள் பாதகர்க்கு வம்புடயாள்
கிண்கிணிய பூனுன்கிளி

ச்ண்டியாயி ச்ங்கரியாயி சாமாளயாயி
கோமளயாயி அருளும் இறையாவளாயி
அண்டி வருவார் தமக்கெல்லாம்
வாழ்வளிக்கும் காளிதருவாள் நமக்கு தனம்

வேதம் வணங்கிடும் வெட்டுடயாள் காளி
தனில் பாதம் பணிந்தால் பதம் தரும் -நிதம்
கிடைக்கும் சுகம் ஓங்கும் கேடில்லா
வாழ்க்கை படைக்கும் நிலைக்கும் பரந்து




கருத்துகள் இல்லை: