வெள்ளி, 26 அக்டோபர், 2018

கால பைரவர் கோவில், உஜ்ஜயின்



உஜ்ஜயின், மதுரையை போன்றே இந்தியாவின் புராதான நகரங்களில் ஒன்று. மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் மற்றும் சுதாமர் அவர்களின் குருவான சண்டபாணியிடம் இங்குள்ள சண்டபாணி ஆசிரமத்தில் தான் குருகுல கல்வி பயின்றார்கள் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கால பைரவர் கோவிலும் ஒன்று.

பொதுவாக சைவ வழிப்பாட்டில் அஷ்ட பைரவர்களை வழிபடுவது வழக்கம். அஷ்ட பைரவர்களுக்கும் தலைவராக கருத்தப்படுபவர் தான் கால பைரவர். கால பைரவர் சிவ பெருமானின் ஒரு அவதாரமாகவே கருதப்படுவார். தமிழகத்தில் அஷ்ட பைரவர்களுக்கும் கோவில்கள் உண்டு. அஷ்ட பைரவர்களும் எட்டு திசையையும் காப்பதாக ஐதீகம். பைரவர் சிவனின் ருத்ரமூர்த்தி. குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய பைரவ கோவிலுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்வது தமிழ் நாட்டில் வழக்கம். சீர்காழியிலுள்ள சட்டநாதர் கோவிலில் உள்ளது 1. அசிதாங்க பைரவர் .தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவர் கிழக்கு திசையை காக்கும் கடவுள். நன்னிலம் அருகிலுள்ள திருமருகையிலுள்ள ரத்னகிரீஸ்வரர் ஆலயத்திலுள்ளது 2. .ருரு பைரவர் - .தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -கார்த்திகை, உத்திராடம், உத்திரம்- தென் கிழக்கு திசையை காக்கும் கடவுள். வைதீஸ்வரன் கோவிலிலுள்ளது 3. சந்த பைரவர். திசை -தெற்கு, தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம். திருநாரையூரிலுள்ள திருவிசநல்லூர் கோவிலில் உள்ளது 4. க்ரோத பைரவர் - திசை தென் மேற்கு, தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள்- ரோகிணி, அஸ்தம், திருவோணம், 5. உன்மத்த பைரவர் - திருவீழிமலை திசை மேற்கு தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள்- தெரியவில்லை. 6.கபால பைரவர் , தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்பந்துருத்தியிலுள்ள திருவினன்குடி ஆலயம், திசை வட மேற்கு, தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -பரணி, பூரம், பூராடம். 7. பீஷண பைரவர், பிரண்மலை, திசை -வடக்கு- தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் -திருவாதிரை, ஸ்வாதி, சதயம், அஸ்வினி, மகம், மூலம் 8. சம்ஹார பைரவர்- திருவெண்காடு மற்றும் வைரவன்பட்டி, திசை வடகிழக்கு- தோஷ நிவர்த்தி நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி.

அகோரிகள் பைரவரையே அதிகம் வழிபடுவார்கள். உஜ்ஜயினில் அகோரிகள் அதிகம் உள்ளனர். இங்கு பைரவருக்கு பக்தார்களால் மது வேண்டுதலாக வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வெளியே விதவிதமாக மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்கிறார்கள். சனிகிழமைகளில் வரும் பௌர்ணமியன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். காளிதாசர் இங்கு பைரவரை வழிப்பட்டதாக சொல்கிறார்கள். இங்கு பக்தர்களால் அளிக்கப்படும் மதுவை பூசாரி பைரவர் விக்கிரகத்தின் உதட்டருகில் உள்ள ஒரு சிறு பிளவில் சற்று சரித்து ஊத்துகிறார். பைரவருக்கு பின்பு ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் மது மாயமாக மறைந்து விடுகிறது. பாட்டிலில் மீதமுள்ள மதுவை பகத்ருக்கே பிரசாதமாக திரும்ப கொடுத்து விடுவார்கள்.

கருத்துகள் இல்லை: