செவ்வாய், 17 ஏப்ரல், 2018

மகாகாலேஸ்வர் கோவில், உஜ்ஜயின் (12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று)

மகாகாலேஸ்வர்



மத்யபிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜையின் என்ற ஊரில் உள்ளது இந்த சிவாலயம். மிகவும் பிரசித்தமான ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று இது. கும்பமேளா நடக்கும் ஊர்களில் உஜஜயினியும் ஒன்று. கோவில் வளாகம் மிக பெரியது. மூலவரை தரிசனம் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. தரைத் தளத்திலிருந்து நில மட்டத்துக்கு கீழே அமைந்திருக்கிறது மூலஸ்தானம். மூலஸ்தானம் செல்லும் வழியில் ஒரு குளக்கரையும் உள்ளது. சற்று பிரம்மாண்டமான அமைப்புடன் கூடிய கோவில் இது. சற்று பெரிய நந்தியும் சிவபெருமானையும் தள்ளி இருந்து தான் தரிசனம் செய்ய முடிந்தது. டிக்கெட் வாங்கி உள்ளே செல்ல அனுமதி இருந்தாலும் நாங்கள் சென்ற நேரம் அந்த தரிசன நேரம் முடிந்ததென சொன்னார்கள். உள்ளே பிள்ளையார், பார்வதி மற்றும் கார்த்திக் (முருகன்) சன்னதிகள் உள்ளது என சொன்னார்கள். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு சிவ பெருமான்  தெற்கு நோக்கி அமைந்திருப்பது. கோவிலின் மூன்றாவது நிலையில் நாகசந்ந்திரேஸ்வர் அமைய பெற்றுள்ளது. நாகபஞ்சமி அன்று மட்டுமே அங்கு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும். இங்கு மகாசிவராத்ரி மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக