எனது பதிவுகளை வாசிக்கும்
அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். எனது உடல்நிலை காரணமாக வெகு நாள்
இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும் வலைப்பதிவுக்கு திரும்பியுள்ளேன். கடந்த நான்காம்
மாதம் உஜ்ஜயின் பதிவுக்கு பிறகு விட்டு போன பதிவுகளை இப்போது பதிவிடுகிறேன்.
மகாகாலேஸ்வர் தரிசனம்
முடித்து விட்டு நாங்கள் உஜ்ஜயின் மஹா களி கோவிலுக்கு சென்றோம். வட இந்தியர்கள்
காளி என்றும் ஹர சித்தி மாதா என்றும் அழைக்கிறார்கள். நமது நாட்டிலுள்ள முக்கியமான
சக்தி பீடங்களில் உஜ்ஜயின் மாகாளி கோவிலும் ஒன்று. மன்னர் விக்ரமாதித்யர் இந்த காளி
தேவியை வழிப்பட்டதாக கூறுகிறார்க்ள். விக்ரமாதித்யர் 11 முறை தனது தலையை வெட்டி காளி
மாதாவுக்கு காணிக்கையாக செலுத்தினார் என்றும் ஒவ்வொரு முறையும் காளி மாதா அவரை உயிர்ப்பித்தார்
என்பதும் வரலாறாக இங்கு கூறப்படுகிறது. கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு அரங்கில் ஒரு பெரிய
விக்ரமாதித்யர் படம் வைத்துள்ள்ர்கள்.
இன்னொரு முக்கியமான ஸ்தல வரலாறுபடி
ஒரு காலத்தில் அந்தகாசுரன் என்ற ஒரு அசுரன் உஜ்ஜயினை ஆண்டு கொண்டிருந்தார். அவரருக்கிருந்த
ஒரு அசுர சக்தி மூலம் அவரது உடலில் இருந்து சிந்தும் ஒவ்வொரு இரத்த துளியும் பூமியில்
விழுந்த உடனே அதிலிருந்து இன்னொரு அந்தகாசுரன் தோன்றினான். இவ்வாறாக அவன் அழிவில்லாதவனக
இருந்தான். கடைசியில் சிவ பெருமான் திருசூலம் மூலம் அவனின் உடலை கிழித்து அசுரனை கொல்கிறார்.
அந்த நேரம் கீழே ஒரு துளி இரத்தம் கூட விழாமல் மாகாளி அனைத்து இரத்தத்தையும் குடித்து
உஜ்ஜயின் மக்களை அந்த அசுரனிடமிருந்து காப்பாற்றியதாக சொல்லப்படுகிறது. மகாலக்ஷ்மி
மற்றும் மகாசரஸ்வதி சிலைகளுக்கு நடுவில் மகா காளி சிலை உள்ளது. காளி சிலை சிந்தூர நிறத்தில்
இங்கு காணப்படும். இங்கு இரண்டு உயரமான தீபம் ஏற்றும் தூண்கள் உள்ளது. நவராத்ரி விழாவின்
போது இந்த தூண்களில் விளக்கு ஏற்றுவார்கள் என்று சொன்னார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக