வியாழன், 15 ஏப்ரல், 2010

ஆதி விநாயகர் ஆலயம்


ஆதி விநாயகர் என்பது யானை முகவிநாயகர் தோன்றுவதற்குமுன் உள்ள விநாயகர் தோற்றம்.இந்த விநாயகர் தும்பிக்கை இல்லாமல் திரு முகத்துடன் காட்சி தருவார். திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் மிக பழமையான மதிமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.இந்த ஆலய வாசலில் தான் ஆதி விநாயகர் சன்னதி உள்ளது . திருஞான்சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். இத்தல முருகன் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். ஈஸ்வரன் திருநாமம் முக்தீஸ்வரர் .அம்மன் திருநாமம் சுவர்ண நாயகி மற்றும் மரகதவல்லி என்பதாகும். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு முன்பே இந்த ஆலயம் பூந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ளது. ராம லக்ஷ்மணர்கள் இந்த இடத்தில் தசரதனுக்கும் ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்ததாக வரலாறு.ராமர் தர்ப்பணம் செய்யும்போது நாலு பிண்டங்கள் பிடித்து வைக்கிறார். அந்த பிண்டங்கள் சிவ லிங்கமாக மாறுகிறது. இந்த நாலு லிங்கங்கள் கோவிலின் பிராகாரத்தில் காணலாம்.இந்த கோவிலில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் பண்ணுவது மிகவும் விசேஷம். இங்கு தர்ப்பணம் பண்ண அம்மாவசை திதி நட்சத்திரம் முதலியவை பார்க்க தேவையில்லை. எந்த நாளிலும் இங்கு பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை: