ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

மணக்குள விநாயகர் ஆலயம்,பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியில் உள்ளது மணக்குள விநாயகர் ஆலயம்.நகரின் மத்தியில் உள்ளது.ஆளுநர் மாளிகையின் பின்புறம் அமைந்துள்ளது இந்த ஆலயம்.500 ஆண்டு பழைமையான ஆலயம் இது.விநாயக சதுர்த்தி இங்கு விமரசியாக கொண்டாடப்படும்.ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவம் இங்கு பிரபலம். 18 நாட்கள் வெகு சிறப்பாக இந்த விழா  கொண்டாடப்படும்.பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த சமயம், பல முறை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் விநாயகர் சிலையை அகற்ற முயற்சித்த பொழுது மீண்டும் மீண்டும் விநாயகர் அங்கு தோன்றிய அதிசயம் நடந்ததாக சொல்லப்படுகிறது.ஆண்டு திருவிழா நடத்த பிரெஞ்சு ஆதிக்க அதிகாரிகள் தடை விதித்த போது அதிக அளவில் மக்கள் சென்னைக்கு குடிபெயற முயற்சித்த பொழுது, இதனால் அங்கிருந்த பிரெஞ்சு ஜவுளி ஆலை பாதிக்க படும் என்று தெரிந்து( பெரும்பாலோர் ஜவுளி ஆலை தொழிலாளர்கள்) பிரெஞ்சு அரசு விழா நடத்த அனுமதித்தது.இறுதியில் பிரெஞ்சு துரை டுப்லே விநாயகர் பக்தராக மாறிய அதிசயமும் நடந்தது.கடலுக்கு மிக அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்றாகி விட்டது.கோவிலுக்குள் ஒரு சின்ன குளம்காண படுகிறது.இந்த இடம் சற்று இருள் சூழ்ந்து காணப்படுவதால் சூடன் ஒளியில் இந்த கிணற்றை பூசாரி பக்தர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.தனி விநாயக ஆலயங்களில் மணக்குள விநாயகர் ஆலயம் மிகவும் பிரசத்தி பெற்றது.

கருத்துகள் இல்லை: