புதன், 28 ஜனவரி, 2009

சங்கமேஸ்வரர் ஆலயம்

சங்கமேஸ்வரர் ஆலயம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் உள்ளது.இது ஒரு கொங்கு நாடு பாடல் பெற்ற ஸ்தலம். இதற்க்கு மறுபெயர் கூடுதுறை . மூன்று நதிகள் கூடும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. பவனி ஆறு,காவிரி மற்றும் அம்ரிதவாகினி என்பது அந்த மூன்று நதிகளாகும்.அம்ரிதவாகினி என்பது சரஸ்வதி நதி போன்றது. அது மண்ணிற்கு அடியில் பாய்வதாக ஐதீகம்.கூடுதுறை திரிவேணி சங்கமத்திற்கு இணையானது.சங்கமேஸ்வரரையும் வேதநாயகி அம்மனையும் வணங்கினால் எந்த தீமையும் அணுகாது என்பது நம்பிக்கை.பவானிக்கு இன்னொரு பெயர் திருநன்னா அதாவது தீமை நன்னா ஊர் என்று பொருள்.
இந்த ஆலயத்தை சுற்றி ஐந்து மலைகள் உள்ளது.சங்ககிரி,திருசெங்கோடு,பத்மகிரி,மங்களகிரி மற்றும் வேதகிரி என்பதாகும் இந்த மலைகள்.சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. இன்னொரு முக்கியமான விஷயம் இது ஒரு சிவ ஸ்தலமாக இருந்தாலும் இங்கு பெருமாளுக்கும் தனி ஆலயம் உள்ளது. அதிகேசவ பெருமாள் மற்றும் சௌந்தரவல்லி தாயார் சன்னதியும் இங்கு உள்ளது. சுப்பிரமணியருக்கும் தனி சன்னதி உள்ளது. அருணகிரிநாதர் இங்கு வந்து முருகனை தரிசித்து பாடல்கள் இயற்றி உள்ளார்.பவானி ஈரோடில் இருந்தி 15 கி.மீ தொலைவிலும் சேலத்தில் இருந்து 56 கி.மீ தொலைவிலும் உள்ளது. கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடில் இருந்து இங்கு சென்று வர பேரூந்து வசதிகள் உள்ளது.

கருத்துகள் இல்லை: