வியாழன், 13 நவம்பர், 2008

வெண்ணைமலை முருகன் கோவில்

கரூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெண்ணைமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி திருகோயில்.கரூர் திண்டுக்கல் புறவழி சாலையில்,இருந்து இந்த கோவிலுக்கு எளிதாக செல்லலாம்..ஒரு சிறு குன்றின் மேல் இந்த ஆலயம் அமைந்துள்ளது.படிகள் அதிகம் இல்லாததால் மிகவும் எளிதாக மலை ஏறி முருகனை தரிசித்து வரலாம்.ஸ்கந்த கவசத்தில் இந்த திருத்தலத்தை குறித்து "வெண்ணைமலை முருகா மெயவீட்டை தந்திடுவீர்" என்ற வரிகள் இடம் பெறுகிறது.காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி சந்நிதிகளும் இந்த கோவிலில் உள்ளது.தை பூசம் மற்றும் ஆடி கிருத்திகை இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை: