புதன், 24 செப்டம்பர், 2008

ஸ்ரீ காளஹஸ்தி கோவில்

காளஹஸ்தி திருப்பதிக்கு அருகில் உள்ள ஒரு பழமை வாய்ந்த சிவ ஸ்தலம். இது ஒரு நவகிரஹ ஸ்தலமும் கூட .ராகுவும் கேதுவும் சிவனை இங்கு வழிபட்டதாக கூறப்படுகிறது.மற்றொரு சிறப்பு பஞ்சபூத ஸ்தலங்களில் காளஹஸ்தி ஒரு வாயு ஸ்தலம். சொர்ணமுகி நதி கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.இங்கு சர்ப்ப தோஷ நிவாரண பூசை மிகவும் பிரசித்தம்.சுவாமிக்கு பெயர் காளத்திநாதர் அல்லது காளத்தியப்பர். அம்மன் பெயர் ஞானப்ரசுனாம்பிகை.இந்த ஆலயம் தக்ஷின கைலாசம் என்றும் அறியப்படுகிறது.இந்த ஆலயத்தில் ஒரு பாதாள விநாயகரும் உள்ளது.திருப்பதியில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் உள்ளது.சென்னையில் இருந்தும் தடா வழியாக காளஹஸ்தி செல்லலாம்.சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

திருப்பாற்கடல்

சென்னை பெங்களூரு தேசீய நெடுஞ்சாலையில் காவேரிபாக்கம் என்ற ஊர் உள்ளது.நெடுஞ்சாலயிலில் இருந்து சுமார் ஐந்து. கி.மீ. ஊருக்குள் செல்லவேண்டும். இந்த ஊருக்கு திருப்பாற்கடல் என்று பெயர்.இங்கு இரண்டு கோவில்கள் மிக அருகில் உள்ளது.பிரம்மா,சிவன்,விஷ்ணு மூவரும் இங்கு ஒரு முனிவருக்கு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.முதல் கோவில் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில்.நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாள் அருகில் சிவலிங்கமும் உள்ளது.பக்கத்தில் இருக்கும் கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் உள்ளார்.சயன கோலத்தில் உள்ள பெருமாளின் தேகம் அத்திமரத்தினால் ஆனது.ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் பெருமாள் பார்க்க மிகவும் ரம்யமாக உள்ளது.இங்கு ரங்கவல்லி தாயார் சன்னதியும் உள்ளது.மிகவும் புராதனமான இந்த க்ஷேத்ரம் தற்பொழுது புதுபிக்கப்பட்டு வரப்படுகிறது.