வியாழன், 28 ஆகஸ்ட், 2008

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர்

திண்டிவனம் பாண்டி சாலையில் திருச்சிற்றம்பலம் விலக்கு என்ற இடத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இந்த இடத்திற்கு பெயர் பஞ்சவடி. திண்டிவனம் பாண்டி சாலையில் 29 வது கி.மீ லும் ,பாண்டியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ லும் உள்ளது. பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை 36 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. நடுவில் ஆஞ்சநேயர் முகமும் சுற்றிலும் கருடர், ஹயக்ரீவர், நரசிம்ஹர், வராஹர் முகங்கள் உள்ளது. ஆஞ்சநேயரின் உக்கிரத்தை குறைப்பதற்கும் , ஆஞ்சநேயரின் அநுகிரஹத்தை பெறவும் உளுந்து வடை மாலை சார்த்துகிறார்கள். அஞ்சநேய தரிசனத்தால் சனி தோஷ நிவர்த்தியும் கிடைக்கிறது. காலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை இந்த ஆலயம் திறந்த்திருக்கும்.

கருத்துகள் இல்லை: